.அவர்களும் திருந்தி இருப்பார்கள் என்று நினைத்தால் அவர்களின் வக்கிர புத்தியை காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.மங்காத்தா வெற்றியை இருவரும் ஒன்றாக கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்த்தால் நடப்பதோ தலை கீழ் .சில நாட்களாக வலையுலகில் முக நூலில் நடக்கும் யுத்தங்கள் என்னுள் தூங்கிக் கொண்டிருந்த விஜய் ரசிகனை தட்டி எழுப்பி விட்டது .
.மங்காத்தா தொடர் விடுமுறை நாட்களை குறி வைத்து வெளியிடப் பட்டது போட்டிக்கு வேறு படம் எதுவும் இல்லை .விடுமுறையை கழிக்க கண்டிப்பாக மக்கள் தியேட்டருக்கு வருவார்கள்.மங்காத்தா இல்ல எந்த ஆத்தா வந்திருந்தாலும் குறிப்பிட்ட வசூல் வரும்தான் .அதையே பெரிய வெற்றி ஆக்கி அடுத்த சூப்பர் ஸ்டார் அளவுக்கு அஜித் ரசிகர்கள் படும் பாட்டை நினைத்தால் கொடுமை தாங்க முடியலடா சாமி .அவங்களுக்கு பழைய சோறு கொடுத்தாலே புரியாணி மாதிரி சாப்பிடுவாங்க .அசலில் அதை எல்லோரும் பார்த்திருப்பீர்கள் .இதிலே கொஞ்சம் சுடு சோறு அவ்வளவுதான். இந்த கிழமை தியேட்டர்கள் காலியாக தொடக்கி விட்டனவாம்.சரி அந்த கதை எதுக்கு நமக்கு. king of opening
சரி தமிழ்சினிமாவின் மாஸ் யாருன்னா அது ரஜினி மட்டும்தான் .இன்றுவரை அதை நிருபித்துக் கொண்டு இருக்கிறார் .ரஜினியின் மாசுக்கு முன்னாள் இவர்கள் எல்லாம் தூசு தான் . கில்லிக்குபின் விஜய் அந்த இடத்தை பிடித்து விட்டார் .தொடர் வெற்றி ரஜினிக்கு இணையான செல்வாக்கு என ரொக்கட் வேகத்தில் உயர்ந்தார் . king ofopening மட்டுமல்ல king of kollywood ஆகி விட்டார் . அவரின் திடீர் வளர்ச்சியே அவருக்கு எமனாகியது . விஜயின் வளர்ச்சி ஓரளவு படித்த இணையத்தை பயன்படுத்தும் பதிவர்களுக்கு பிடிக்கவில்லை (ரஜனிக்கே பிடிக்காத போது இவர்களுக்கு பிடிக்காமல் போனதில் ஐயம் இல்லை) .சாதாரண நடிகனுக்கு இவ்வளவு புகழா ?விஜயை வளர விட கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள் .விஜயை தாக்கி தாறு மாறாக எழுதினார்கள் .விஜயைஎவ்வளவு மோசமாக தாக்க முடியுமோ அவ்வளவு தாக்கினார்கள் . .பிரபலபதிவர்கள் பலரும் தமது இருப்பை தக்க வைத்துக் கொள்ள இடைக்கிடையே விஜயை கேவலப் படுத்தி ஒரு பதிவு போடுவதை இன்று வரை வழக்கமாக கொண்டுள்ளனர் .
. ஏன் . அனைவரும் விஜயை கேவலப் படுத்துகிறார்கள் .சக நடிகர்கள் அஜித் , சூர்யா,விக்ரம் கண்டுப்பதே இல்லை.ஏன்அவர்கள் மக்கள் மத்தியில் விஜய் அளவுக்கு பிரபலம் கிடையாது. .இணையத்தில் தமிழ் சினிமா பக்கம் வரும் ஒருவர் அதிகம் தேடிய நடிகர் விஜய் என்பதை கூகுளே வெளிப்படையாக அறிவித்தது . விஜய் சொல்லியது போல என்னை எதிர்க்கவும் என்னுடைய முகமே தேவைப் படுகிறது என்பது இந்த விடயத்திலும் உண்மைதான். விஜய்க்கும் அஜித்துக்கும் என்ன வித்தியாசம்?
மங்காத்தா படத்தை, தற்போது தமிழ்நாட்டி ல் உள்ள மூன்று பெரும் நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடுகின்றன.
பத்தாததற்கு ராதிகா நிறுவனமும்சேர்ந்துகொண்டது.
சன் டிவி காரர்கள் ஒன்னே ரூபா வசூலிக்கிற படத்தையே மகாஹிட்ன்னு பீத்திக்குவாங்க.
இந்தப்படம் 'ஒம்பது' ரூபாவாவது வசூலிக்கும். ஏன்னா அஜித் இருக்காரில்லையா?.. அப்படின்னா இந்தப்படத்தை blockbuster என்று தம்பட்டம் அடிச்சுக்குவார்கள். இவ்வளவு பெரிய நிறுவனங்கள், இவ்வளவு பெரிய விளம்பரம், 2 வருடம் கழிச்சு வரும் அஜித் படம். (அசல் க்கு பிறகு விஜய்க்கு இரண்டு படம் வந்துவிட்டது) இது எல்லாத்தையும் தாண்டி படம் பப்படம் ஆச்சின்னா, அப்புறம் அது தல கிடையாது..
மாஸ் ஹீரோன்னா , விளம்பரம் இல்லாம, பெரிய நிறுவனம் இல்லாம, ஆறு மாசத்துக்கு ஒரு படம் வந்தாலும், opening கிராண்டா இருக்கணும்.. அவர்தான் மாஸ்.. அது எப்படி என்று கேட்கிறீர்களா?
இப்படி....
காவலன் ரிலீஸ் ஆகும்போது, எவ்வளவு அரசியல் நெருக்கடி, இப்போது மங்காத்தாவை வெளியிடும்
அனைத்து நிறுவனங்களும் காவலன்க்கு எதிராக இருந்தன.. பெரிய நிறுவன தயாரிப்பு இல்லை, படம் வெளியே வருமா.. வராதா என்றே தெரியாத சூழ்நிலை.. காவலனுக்கு ஆறு மாதங்களுக்கு முன் வந்த சுறா, விஜய் ரசிகர்களுக்கே பிடிக்கல, இருந்தும்.. காவலன் ஹிட்..
இதுதான் விஜய்க்கும், அஜித்க்கும் உள்ள வித்தியாசம்..விஜய்க்கு பெரிய நிறுவனங்கள் தேவையில்ல, பெரிய விளம்பரம் தேவையில்லை, பெரிய மியூசிக் டைரக்டர் தேவையில்லை..பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகும்..(அசல், ஏகன் படங்களின் பாடல்கள்
யாருக்காவது ஞாபகம் இருக்கா?, வில்லு, சுறா பிளாப் ஆனாலும் பாடல்கள் இன்று வரை hit .. படத்துக்கு மிகப்பெரிய opening இருக்கும்.. அஜித் படங்கள் ஆறு மாசத்துக்கு ஒன்று வரட்டும் .. (ரெண்டு வருசத்துக்கு ஒன்னு வந்தே சிலதுதான் தேறுது )அப்போது தெரியும்..
நன்றி -விஜய் சார்பு சமுக தளங்கள்ஃ