தன் மேல் அளவு கடந்த பாசத்தையும் நேசத்தையும் வைத்திருக்கும் ரசிக பெருமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய, வேலாயுதம் படத்துக்காக கடுமையாக உழைத்துள்ளார். விஜய்யின் வேலாயுதம் படம் ரசிகர்களுக்கு நிச்சயம் திருப்தியளிக்கும் என்கிறது பட வட்டாரம். வேலாயுதம் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி விஜய்க்கு மிகவும் பிடித்துபோனது.

சென்னை பகுதியில் உள்ள மில் ஒன்றில் வேலாயுதம் படத்துக்காக டான்ஸ் பாடல் காட்சியை படமாக்கினார்கள். அப்போது சில மணி நேர இடைவேளையில் படத்தின் க்ளைமாக்ஸை படக்குழுவினருக்கு காண்பித்துள்ளார் டைரக்டர் ராஜா.
படத்தின் நாயகன் விஜய் சார் க்ளைமாக்ஸை பார்த்திட்டு ரொம்ப நெகிழ்ந்து போய் பாராட்டியுள்ளார். உடனே படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு தலா ஒரு சவரன் தங்கச்சங்கிலி பரிசளிக்க ஏற்பாடு செய்தார்என்கிறது பட வட்டாரம்.
வேலாயுதம் படத்தின் இயக்குனர் ராஜா, வேலாயுதம் படம் விஜய் எதிர்பார்த்ததை விட நன்றாக வந்துள்ளதாக கூறியுள்ளார். க்ளைமாக்ஸ் காட்சி சிறப்பாக இருந்ததால்அனைவரையும் பாராட்டியுள்ளார்.
என் தந்தை எடிட்டர் மோகனை அழைத்து படம் எடுக்கப்பட்ட விதம் குறித்து விஜய் மனம் திறந்து சிலாகித்துள்ளார். வேலாயுதம் படத்தை இயக்கியதற்காக நாயகன் விஜய்நிச்சயம் என்னை பாராட்டுவார் என காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளாராம்.
2.விஜய் இன் சம்பளம் 25 கோடி
விஜய் இன் சம்பளம் உயர்ந்து உள்ளது.ஆம் விஜயின் வேலாயுதம் படம் வெளி வந்த பிறகு இவரது சம்பளம் என்ன என்பது தெரிய வரும்.இதற்கு காரணம் விஜய் படங்கள் தமிழ் மொழி தவிர தெலுகு,ஹிந்தி,மலையாளம் ஆகிய நான்கு மொழிகளிலும் டப் செய்ய படும்.விஜய் படங்களுக்கு அங்கும் நல வரவேற்பு உள்ளது அதனால் இனி இந்த நான்கு மொழிக்கு(ரசிகர்களுக்கு) ஏற்ப படத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டு வெளியாகும். இதற்கு சாம்பில் நண்பன்,வேலாயுதம் படங்கள் அந்த அந்த மொழி களுக்கு ஏற்ப படத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது .ஆனால் நண்பன் படம் முழுவதும் தெலுகு மொழிகு ஏற்ப பல மற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரண மாகவே இந்த சம்பள உயர்வு.இவரது சம்பளம் 25 கோடிஇருக்கும் என தெரிகிறது.
3.ரஜினிக்கு ஒரு பாட்ஷா போல, விஜய்க்கு வேலாயுதம்! – ஜெயம் ராஜா பேட்டி
விஜய், ஹன்சிகா, ஜெனிலியா மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் படம் ‘வேலாயுதம்’. இப்படத்தை ஜெயம் ராஜா இயக்க, விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்.
இப்படம் குறித்து ஜெயம் ராஜா கூறுகையில், “விஜய் சார் குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் பிடித்தவர். என் பாதையும் அதுதான். குழந்தைகள் மற்றும் குடும்பதினரை நோக்கியே என் படமும் இருக்கும். இந்த ஒத்த சிந்தனையால் எங்களுக்குள் கண்ணுக்கு தெரியாத இணக்கமும் நெருக்கமும் வந்து விட்டன.
‘வேலாயுதம்’ தீபாவளிக்கு வருகிறது. விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் கொண்டாட்டமான ஒரு படமாக இருக்கும். ஹீரோயிசத்தை சரியாகப் பயன்படுத்தி வெளிப்படுத்தியிருக்கும் படமாகஇது இருக்கும்.ஆஸ்கர் ரவிச்சந்திரன் பற்றி சொல்ல வேண்டியதில்லை. படம் நன்றாக வர அவர் ஆகாயம் வரைமேலே போவார். பாதாளம் தாண்டியும் கீழே செல்பவர். ஒரு காட்சிக்கு ஒரு லட்சம் பேர் தேவைப்பட்டனர். ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. ஏற்பாடு செய்து விட்டார்.. அதுவும் கேரளாவில்…
இதுவரை 150 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. பாக்கியுள்ள ஒரு பாடலுக்காக காஷ்மீர் செல்ல இருக்கிறோம்.
தமிழ் ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாக வேலாயுதம் அமையும்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு ‘எங்க வீட்டு பிள்ளை’ போல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ‘பாட்ஷா’வைப்போல், விஜய்க்கு `வேலாயுதம்’ படம் அமையும்,” என்றார்.
4.விஜய், முருகதாஸ் இணையும் புதியபடத்தில் சந்தோஷ் சிவன் பணியாற்றுகிறார் என்ற நம்முடையநேற்றைய செய்தி ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டிருக்கிறதுஃ
பிரமாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க மாடல் அழகி ஏஞ்சலா ஜான்ஸனை ஒப்பந்தம் செய்துள்ளார் முருகதாஸ்.விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும், ஆஸ்கர் ரவிச்சந்திரனும் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். 5.யோகனுக்காக தயாராகும் விஜய் கெளதம் ,ரகுமான்
இளைய தளபதி விஜய் கோலிவுட்டில் 'வேலாயுதம்', 'நண்பன்' போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.
தற்போது இயக்குனர் கெளதம் மேனன், நாயகன் ஜீவா-நாயகி சமந்தா நடிப்பில் உருவாகும் 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் மும்மரமாக இருக்கின்றார்.
அடுத்த வருட துவக்கத்தில் 'யோஹன்' படத்துக்கான வேலைகள் துவங்கும் என்பதால் இப்போதிலிருந்தே படத்தின் நாயகன் விஜய் தயாராகி வருகிறார் என்கிறது பட வட்டாரம்.
விஜய்க்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் இது வித்தியாசமான படமாக இருக்கும். தனது பாணி படங்களில் இருந்து விஜய் சற்று விலகி, கொலிவுட்டின் முன்னணி இயக்குனர்களான ஷங்கர், கெளதம் மேனன், முருகதாஸ் ஆகியோரின் படங்களில் வித்தியாசமாக முயற்சிக்க களமிறங்கியுள்ளார்.
இதனால் விஜய்யின் 'நட்சத்திர நாயகன்' அந்தஸ்து மேலும் பல மடங்கு மிளிரும் என பட வட்டாரம்எதிர்பார்க்கிறது.
அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.